சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

TATA IPL Indian Cricket Team
By Karthikraja Feb 02, 2026 02:37 PM GMT
Report

ஸ்பாட் பிக்சிங்கில் சிறை சென்றது குறித்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பேசியுள்ளனர்.

ஸ்ரீசாந்த் கைது

2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரில், பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி, 16 மே 2013 அன்று ஸ்ரீசாந்த் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் மும்பையில் வைத்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 3 பேரும் 27 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

தற்போது ‘Who’s The Boss?’ என்ற யூடியூப் தொடருக்கு அளித்த பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி குமாரி.

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

இந்தியாவிற்கு எதிரான போட்டி புறக்கணிப்பு - பாகிஸ்தானுக்கு என்ன தண்டனைகள் கிடைக்கும்?

தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

இது குறித்து பேசிய புவனேஸ்வரி குமாரி, "நாங்கள் அப்போது காதலித்து வந்தோம். நாங்கள் திருமணம் செய்யும் திட்டம் குறித்து என் தந்தைக்கு தெரியாது.

ஒரு நாள், நான் ஹைதராபாத்தில் இருந்தபோது, என் நண்பர்கள் அனைவரும் காலை 7 மணிக்கு டிவியை பார்க்க சொன்னார்கள். அப்போது தான் அவர் ஸ்ரீகாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் கைது செய்யப்பட்டதை அறிந்தேன். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

இதை நான் என் அப்பாவிடம் எப்படி சொல்லப் போகிறேன்? என யோசித்தேன்.

அப்போது என் அப்பாவிடம், "நீங்கள் என் பேச்சைக் கேட்பீர்கள், டி.வியில் நீங்கள் பார்த்ததை வைத்து இந்த திருமணத்தை ரத்து செய்ய மாட்டீர்கள் நீங்கள் எனக்கு உறுதியளிக்கும் வரை நான் திரும்பி வரமாட்டேன்.

ஏனென்றால், கடவுளே வந்து இதை ஸ்ரீசாந்த் இதை செய்ததாகச் சொன்னாலும், நான் அதை ஒருபோதும் நம்ப மாட்டேன் என தெரிவித்தேன்" என பேசினார்.

உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு

இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த், "நான் கைது செய்யப்பட்ட போது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவில் இருந்தேன். உண்மையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

நான் ஒரு பயங்கரவாதி என்று சொன்னார்கள், என்னைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

நான் இன்னும் 3 நாட்களில் கொல்லப்படலாம் அல்லது நானே உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என என் சகோதரனிடம் தெரிவித்தேன்.

அப்போது என் சகோதரர் ஒரு பெண் உனக்காக 7 ஆண்டுகள் காத்திருக்கிறாள். தயவு செய்து, முட்டாள்தனமாக எதுவும் செய்து விடாதீர்கள் என அவள் என்னிடம் சொன்னாள் என தெரிவித்தார்.

அவள் என்னுடன் இருப்பதாக கூறி, இதிலிருந்து வெளியே வந்து போராட எனக்கு நம்பிக்கை அளித்தாள். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

நான் என் வருங்கால மாமனாரை முதல் முறையாக நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான் அழப் போகிறேன் என்பதை உணர்ந்த அவர், அழாதே என்பதை உறுதி அளிக்கும் வகையில் சைகை காட்டியது எனக்கு நம்பிக்கையைத் தந்தது, அவர் என்னை தைரியமாக இருக்கச் சொன்னார்.

நான் சிறையில் இருந்த 27 நாட்களும், புவனேஸ்வரி குமாரி தரையில் தான் உறங்கினார் என தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரீசாந்த் முதல் முறையாக புவனேஸ்வரியை சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்தனர். 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி | Sreesanth Wife Recalls His Spot Fixing Arrest

12 டிசம்பர் 2013 அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புவனேஸ்வரி ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள திவான்புரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US