சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி
ஸ்பாட் பிக்சிங்கில் சிறை சென்றது குறித்து ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி பேசியுள்ளனர்.
ஸ்ரீசாந்த் கைது
2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரில், பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி, 16 மே 2013 அன்று ஸ்ரீசாந்த் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் மும்பையில் வைத்து டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். 3 பேரும் 27 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது ‘Who’s The Boss?’ என்ற யூடியூப் தொடருக்கு அளித்த பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி குமாரி.
தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி
இது குறித்து பேசிய புவனேஸ்வரி குமாரி, "நாங்கள் அப்போது காதலித்து வந்தோம். நாங்கள் திருமணம் செய்யும் திட்டம் குறித்து என் தந்தைக்கு தெரியாது.
ஒரு நாள், நான் ஹைதராபாத்தில் இருந்தபோது, என் நண்பர்கள் அனைவரும் காலை 7 மணிக்கு டிவியை பார்க்க சொன்னார்கள். அப்போது தான் அவர் ஸ்ரீகாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் கைது செய்யப்பட்டதை அறிந்தேன்.

இதை நான் என் அப்பாவிடம் எப்படி சொல்லப் போகிறேன்? என யோசித்தேன்.
அப்போது என் அப்பாவிடம், "நீங்கள் என் பேச்சைக் கேட்பீர்கள், டி.வியில் நீங்கள் பார்த்ததை வைத்து இந்த திருமணத்தை ரத்து செய்ய மாட்டீர்கள் நீங்கள் எனக்கு உறுதியளிக்கும் வரை நான் திரும்பி வரமாட்டேன்.
ஏனென்றால், கடவுளே வந்து இதை ஸ்ரீசாந்த் இதை செய்ததாகச் சொன்னாலும், நான் அதை ஒருபோதும் நம்ப மாட்டேன் என தெரிவித்தேன்" என பேசினார்.
உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு
இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த், "நான் கைது செய்யப்பட்ட போது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவில் இருந்தேன். உண்மையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
நான் ஒரு பயங்கரவாதி என்று சொன்னார்கள், என்னைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினர்.

நான் இன்னும் 3 நாட்களில் கொல்லப்படலாம் அல்லது நானே உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என என் சகோதரனிடம் தெரிவித்தேன்.
அப்போது என் சகோதரர் ஒரு பெண் உனக்காக 7 ஆண்டுகள் காத்திருக்கிறாள். தயவு செய்து, முட்டாள்தனமாக எதுவும் செய்து விடாதீர்கள் என அவள் என்னிடம் சொன்னாள் என தெரிவித்தார்.
அவள் என்னுடன் இருப்பதாக கூறி, இதிலிருந்து வெளியே வந்து போராட எனக்கு நம்பிக்கை அளித்தாள்.

நான் என் வருங்கால மாமனாரை முதல் முறையாக நீதிமன்றத்தில் சந்தித்தேன். நான் அழப் போகிறேன் என்பதை உணர்ந்த அவர், அழாதே என்பதை உறுதி அளிக்கும் வகையில் சைகை காட்டியது எனக்கு நம்பிக்கையைத் தந்தது, அவர் என்னை தைரியமாக இருக்கச் சொன்னார்.
நான் சிறையில் இருந்த 27 நாட்களும், புவனேஸ்வரி குமாரி தரையில் தான் உறங்கினார் என தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரீசாந்த் முதல் முறையாக புவனேஸ்வரியை சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலித்து வந்தனர்.

12 டிசம்பர் 2013 அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புவனேஸ்வரி ராஜஸ்தானின் அல்வாரில் உள்ள திவான்புரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |