சூப்பர் ஓவரில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணி த்ரில் வெற்றி
இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
சூர்யன்ஷ் 72 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நடந்தது.

முதலில் ஆடிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி 21 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் திலக் வர்மா 23 ஓட்டங்களும், ருதுராஜ் 37 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, சூர்யன்ஷ் ஷெட்கே (72) மற்றும் விப்ராஜ் நிகம் (51) ஆகியோர் அரைசதம் விளாசினர்.

இதன்மூலம் இந்திய அணி 265 ஓட்டங்கள் சேர்த்தது. மொஹம்மது ஷிராஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை ஏ அணியும் 50 ஓவர்களில் 265 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.
சதீரா சமரவிக்ரமா 93 ஓட்டங்களும், நிரோஷன் திக்வெல்ல 37 ஓட்டங்களும் எடுத்தனர். ஆயுஷ் பதோணி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட, முதலில் ஆடிய இலங்கை ஏ அணி 17 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் இந்திய அணியில் களமிறங்கிய சூர்யன்ஷ் முதல் 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுக்க, அடுத்த மூன்று பந்துகளை சூர்யவன்ஷி எதிர்கொண்டார்.
ஓவரின் 4வது பந்தில் 2 ஓட்டங்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்த அவர், கடைசி பந்தினை டாட் வைத்துவிட்டார். இதனால் இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |