ரஷ்யாவில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்கள்! இழப்பீடு கேட்டு அழைப்பு விடுப்பு
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டவர்களில் 17 இலங்கையர்கள் கொல்லப்பட்டதற்கு, இலங்கை அரசு இழப்பீடு கேட்டு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நீடித்து வரும் சண்டை
ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், போரில் ஈடுபட வெளிநாடுகளில் இருந்து ரஷ்யா தங்கள் ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து வருகிறது.
ஆனால் பாதுகாப்பு பணி, அதிக ஊதியம் என பொய்யான வாக்குறுதிகளை ரஷ்யா கொடுத்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அந்த வகையில் 450க்கும் மேற்பட்டோர் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவில் 17 இலங்கையர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் இறப்பிற்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாகவும், அங்குள்ள இலங்கை தூதரகம் நேற்று தெரிவித்தது.
இழப்பீடு
இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ''நடவடிக்கையில் கொல்லப்பட்ட 17 இலங்கையர்கள், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல். தொடர்புகொள்ள முடியாத இலங்கையர்களின் அவலநிலை, தானாக முன்வந்து திரும்புவதற்கான வாய்ப்பு, ஒப்பந்தங்களை முன்கூட்டியே நிறுத்துதல் மற்றும் ஊதியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் மேலும் தீர்வு காண இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |