உலகக்கோப்பையை வெல்லும் கனவுடன் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி! சிறப்பாக செயல்பட ரசிகர்கள் வாழ்த்து
2021 டி-20 உலகக் கோப்பை மற்றும் ஓமானுடனான இரு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
தசூன் சானக்க தலைமையிலான அணியே இலங்கையில் இருந்து கிளம்புகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை அணி, ஓமான் கிரிக்கெட் அணியுடன் இரு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி இலங்கை ஓமானனுடன் தனது முதல் போட்டியை அக்டோபர் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டியை 09 ஆம் திதியும் விளையாடுகிறது. போட்டிகளின் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கை அணி திரும்பும்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன், இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும். இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற போதிலும், இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாக இழந்தது.
இந்நிலையில் தோல்வியடைந்த மனநிலையுடன் உலக கோப்பை கனவுடன் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது இலங்கை அணி.
எனினும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் செய்த தவறுகளை சரிசெய்து உலக கோப்பை சவாலுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் இலங்கை அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.