இலங்கைக்கு IMFவின் கடனுதவி : 2.9 பில்லியன் டொலர்கள்!
இலங்கையில் பொருளாதார பிரச்சினை நிலவி வருவதால் இலங்கைக்கு பணம் தேவைப்படுகிறது.
ஆகவே இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கொடுப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வசதியை பெற்றுக்கொண்டதால் மற்றைய நாடுகளில் இருந்தும் நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு இலங்கைக்கு உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இந்த நிதி வசதி 48மாத காலமுடையதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.