கோட்டாபயவிற்கு அடைக்கலம் தரவில்லை.. சிங்கப்பூர் அரசு முக்கிய அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறுகிய கால பயண அனுமதியை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், அவருக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 14 அன்று "தனிப்பட்ட பயணமாக" நாட்டிற்கு வந்தபோது, சிங்கப்பூர் அரசு 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை வழங்கியுள்ளது.
73 வயதான ராஜபக்ச, ஜூலை 13 அன்று இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு சென்று, பின்னர் அங்கிருந்து சவூதி விமானத்தின் மூலம் சிங்கப்பூருக்கு 14-ஆம் திகதி சென்றார். ராஜினாமா செய்யாமல் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற அவர், சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ராஜபக்சவின் சிங்கப்பூர் பயணம் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், வந்தவுடன் அவருக்கு குறுகிய கால (4 நாள்) பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டதாகக் கூறியது.
மேலும், ராஜபக்ச அடைக்கலம் கேட்கவில்லை என்றும், அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்தது.
சமூகப் பயணங்களுக்காக சிங்கப்பூருக்குள் நுழையும் இலங்கையிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு பொதுவாக 30 நாட்கள் வரையிலான கால அளவு கொண்ட STVP வழங்கப்படும் என்று ICA தெரிவித்துள்ளது.
இங்கு தங்குவதை நீட்டிக்க விரும்புபவர்கள் தங்கள் STVP-ன் நீட்டிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று ICA தெரிவித்துள்ளது.