இலங்கையின் வெள்ளவத்தை கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் வெள்ளவத்தை கடல் பகுதிக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சுற்றி திரியும் முதலை
இலங்கையின் வெள்ளவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சமீபத்தில் முதலை ஒன்று சுற்றித் திரிவது பார்க்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை ஒன்றும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த கடல் பகுதியில் மக்கள் குளிப்பதை பார்க்க முடிந்தது.
எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் பொதுமக்கள் மீது பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் அப்பகுதிக்கு செல்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |