எங்கள் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொரோனாவால் இறந்துவிட்டார்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மாலத்தி தீவில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தினந்தோறும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இறப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், மாலத்தீவில் கொரோனாவால் 37 வயது மதிக்கத்தக்க இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கிருக்கும், Indhira Gandhi Memorial மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 4.24 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இதை அந்நாட்டின் Health Protection Agency தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இவரின் மரணத்தோடு மாலத்தீவில் இதுவரை கொரோனாவால் 176 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இலங்கையரின் பெயர், இங்கு என்ன செய்து வந்தார்? என்பது குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை.
Today (04/06/21) at 04:24 am a 37-year-old Sri Lankan male brought to IGMH / ER was declared dead
— Health Protection Agency (@HPA_MV) June 4, 2021
This is the 176th COVID-19 death in the Maldives
Our thoughts and prayers are with the bereaved family. May Allah grant his soul eternal peace in heaven