பிரித்தானியா பற்றிய தவறான தகவல்கள்... பேஸ்புக்கில் பெருந்தொகை சம்பாதிக்கும் ஆசிய நாட்டவர்
இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டுகள் வரை சம்பாதித்ததாக விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வயதானவர்கள்
குறித்த நபரின் பேஸ்புக் பக்கங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இலங்கையரான கீத் சூரியபுரா மற்றும் அவரது மாணாக்கர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களை நடத்தி வருகின்றனர். அதில் லேபர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பறி, நடத்தி வருவதாகவும், லண்டனில் கவுன்சில் குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது.
பேஸ்புக் பக்கங்களை உருவாக்குவதும், அதில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றை சூரியபுரா நடத்தி வருகிறார்.
பெரும்பாலும் வயதானவர்களை இலக்கு வைக்கவும், அவர்களே புலம்பெயர் மக்களை விரும்புவதில்லை என்றும் தமது மாணாக்கர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.
தமது பேஸ்புக் பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக சூரியபுரா பணம் சம்பாதிக்கிறார். சூரியபுராவும் அவரது மாணவர்களும் 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களை நடத்தி வருவதாக புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

சூரியபுரா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த கடிகாரங்களைக் காட்டுகிறார், ஐந்து நட்சத்திர உணவகங்களில் தானும் நண்பர்களும் சாப்பிடும் படங்களைப் பகிர்ந்து கொள்கிறார், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு குடியிருப்பின் காணொளிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத்தில் எவ்வாறு சம்பாதிப்பது தொடர்பில் தாம் ஒரு நிபுணர் என குறிப்பிடும் சூரியபுரா, உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த மார்ச் மாதம் சூரியபுராவின் ஒரு பேஸ்புக் பக்கத்தில், லண்டன் மேயர் சர் சாதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார் என பதிவு செய்திருந்தார்.
பொய்த்தகவல்
அந்த ஒரு பேஸ்புக் பக்கத்தில் இருந்து மட்டும் மாதம் 1000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பதாக சூரியபுரா தெரிவித்துள்ளார். புலம்பெயர் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் உள்ள கருத்துக்களை அதிகமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமது மாணவர்களுக்கு அவர் காணொளி ஒன்றி அறிவுறுத்துகிறார்.
மேலும், இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை என காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாக சூரியபுரா தமது பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார். ஆனால் புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில்,
இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், 128 பேஸ்புக் பக்கங்களை தாம் நிர்வகிக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |