டிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல்! குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்
இலங்கை அணியின் கேப்டன், இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட்டை சந்தித்து பேசிய போது, அவர் நடந்து கொண்ட விதம், ரசிகர்களால் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த இலங்கை அணிக்கு, இந்த வெற்றி இப்போது நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மேலும், இப்போட்டியின் போது இடையில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மைதானத்திற்குள் வந்து அதன் தன்மையை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, இலங்கை கேப்டன் தசுன் ஷனகா நீண்ட நேரமாக ராகுல் டிராவிட் உடன் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலானது. அதில், டிராவிட்டை சந்தித்து பேசிய போது, தசுன் ஷனகா அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக தன்னுடைய தொப்பியை கழற்றி பேசினார்.
இதைக் கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டினர். இது குறித்து தசுன் ஷனகா கூறுகையில், நான் அவரை சந்தித்து மரியாதை நிமித்தமாகவே பேசினேன், வேறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.