டி20 உலகக்கோப்பை! இன்றைய போட்டியில் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள்... காரணம் இதுதான்
டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விளையாடும் இலங்கை அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடவுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று தொடங்கியது. தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடவுள்ளனர்.
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுரா (68) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இலங்கை வீரர்கள் இவ்வாறு விளையாடுகின்றனர்.
அதே போல 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர்.