டி20 உலகக் கோப்பையில் ‘குரூப் ஆஃப் டெத்’-ல் இலங்கை அணி!
டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதிச்சுற்றிலிருந்து ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறியுள்ள இலங்கை அணி, ‘குரூப் ஆஃப் டெத்’-ல் இடம்பிடித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. நேற்றுடன் தகுதிச்சுற்று முடிந்த நிலையில், குரூப் ‘ஏ’-வில் முதல் இடம் பிடித்த இலங்கை அணி ‘சூப்பர் 12’ சுற்றில் ‘குரூப் 1’பிரிவில் இடம்பிடித்துள்ளது.
குரூப் 1 பிரிவு ‘குரூப் ஆஃப் டெத்’ என அழைக்கப்படுகிறது, குரூப் 2 உடன் ஒப்பிடுகையில் குரூப் 1-ல் மிகவும் கடினமான அணிகள் இடம்பெற்றுள்ளதே அதற்கு முக்கிய காரணம்.
‘குரூப் 1’-ல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளது.
‘குரூப் 2’-வில் ஆப்கானிஸ்தான், இந்தியா, நமீபியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் உள்ளன.
இன்று அபு தாபியில் தொடங்கும் ‘சூப்பர் 12’ சுற்றின் முதல் போட்டியில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதைத்தொடர்ந்து துபாயில் நடக்கும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். இறுதியில் இரண்டு குரூப்பிலும் புள்ளிப்பட்டியிலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெறும்.
‘குரூப் ஆஃப் டெத்’-ல் இடம்பிடித்துள்ள இலங்கை அணி பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டுகளை பிடித்து அரையிறுதிக்கு தகுதிப்பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.
அதேசமயம் நேற்று நெதர்லாந்துக்கு எதிராக தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.