இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட்! டாஸ் வென்ற ரோகித் சர்மா... பழிதீர்க்க தயாரான திமுத் படை
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அணியினர் புதிய உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த போட்டியை நேரில் காண அவரின் தாயார், மனைவி மற்றும் மகள் மைதானத்திற்கு வரவுள்ளனர்.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்களின் விபரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.