இலங்கை அபார வெற்றி! நமீபியாவின் விக்கெட்டுகளை அள்ளிய பவுலர்கள்
டி20 உலகக்கோப்பை குவாலியபயர் போட்டியில் இலங்கை அணி நமீபியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை டி20 தொடருக்கான குவாலியபயர் போட்டியில் இன்று இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் Sheikh Zayed மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய நமீபியா அணி, இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது.
அந்தணியின் துவக்க வீரர்களான Stephan Baard(7), Zane Green(8) என அடுத்தடுத்து வெளியேற, மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களாக களமிறங்கிய Craig Williams மற்றும் Gerhard Erasmus நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் நமீபியா அணியின் ரன் விகிதம் சீராக சென்று கொண்டிருந்த போது, Craig Williams 29 ஓட்டங்களிலும், Gerhard Erasmus 20 ஓட்டங்களிலும் அவுட் ஆகியதால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, இறுதியாக நமீபியா அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 96 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியின் மகீஷ் தீஷ்சன்கா அற்புதமாக பந்து வீசி 4 ஓவரில் 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இவரைத் தொடர்ந்து லஹுரு குமாரா மற்றும் வஹுண்டு ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் பின் 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 13.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணாண்டோ 30 ஓட்டங்கள் எடுத்தும், பனுகா ராஜபக்ஷா 42 ஓட்டங்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.