பெற்ற பிள்ளைகளை துடிக்க துடிக்க கொலை செய்த இலங்கை பெண்! இத்தாலியில் அரங்கேறிய கொடூர சம்பவம்
இத்தாலியில் பெற்ற பிள்ளைகளை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த இலங்கை பெண்ணை பொலிஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இலங்கையை பூர்விகமாக கொண்ட Sachithra Nisansala Fernando(33) தனது சாபதி(11) மற்றும் சாந்தினி(03) என இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் ஜனவரி மாதம் முதல் இத்தாலி, வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கி உள்ளனர். Sachithra Nisansala Fernando மற்றும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பெண் குழந்தைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரண்டு குழந்தைகளும் படுக்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இதையடுத்து பெண்கள் காப்பகத்தின் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் பிள்ளைகளின் உடலில் எந்தவித இரத்த காயமும் இல்லை.
அவர்கள் மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள Sachithra Nisansala Fernandoவை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.