தெய்வ பக்தி கொண்டவர்: எரித்து கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து உருக்கமான தகவல்கள்
பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து புதிய தகவல்களை உள்ளூர் வாசிகள் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த Priyantha Diyawadana (40) பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரியந்தா குமாரா கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்துடன் அலுவலகத்தில் இருந்த Priyanthaவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்தனர், தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
அந்த சமயத்தில் அந்த கும்பல் அல்லாவு அக்பர் என கோஷம் போட்டனர். உயிரிழந்த Priyanthaவுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உயிரிழந்த Priyantha மிக சிறந்த மனிதராக உள்ளூர் வாசிகளால் அறியப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் கூறுகையில், Priyantha மிகவும் ஒழுக்கமானவர். கடின உழைப்பாளியான அவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.