பொது இடத்தில் இருக்க பயமா இருக்கு! வாட்டும் குற்ற உணர்வு.. நியூசிலாந்து தாக்குதல் நடந்த நிலையில் வேதனையுடன் பேசிய அங்கு குடும்பத்துடன் வாழும் இலங்கையர்
நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் சமீபத்தில் தாக்குதல் நடத்திய நிலையில் அதன் பிறகான வாழ்க்கை மாற்றம் குறித்து அங்கு குடும்பத்தாருடன் வாழும் மற்றொரு இலங்கையர் வேதனையுடன் பேசியுள்ளனர்.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் Ahamed Aathill Mohamed Samsudeen (32) என்ற இலங்கையர் சமீபத்தில் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்கு பின்னர் ஐஎஸ் ஆதரவாளரான சம்சுதீன் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் சம்சுதீனின் இந்த தவறான செயலுக்கு பின்னர் அன்றாட வாழ்வில் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் பேசியுள்ளனர்.
கடந்த 1990களில் தனது பெற்றோருடன் இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தவர் சுவீன் வல்கம்போலா (29). இவர் DualityNZன் துணை நிறுவனர் ஆவார். அவர் கூறுகையில், இந்த தாக்குதலுக்கு பின்னர் பதற்றம் மற்றும் சங்கடமான உணர்வு உள்ளது.
Photo / Supplied
ஏறக்குறைய கடந்த 30 ஆண்டுகளில், இந்த சூப்பர் மார்க்கெட் தாக்குதலுக்கு பிறகு பொது இடத்தில் இருப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. அந்த குற்றத்தை செய்த பயங்கரவாதியுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் அவர் செய்த குற்றத்திற்காக தான் குற்ற உணர்வை அனுபவிக்கிறேன்.
ஒரே பகுதியில் இருந்து நாங்கள் இருவரும் நியூசிலாந்துக்கு வந்தோம் என்பதற்காக இப்படியான உணர்வு எனக்கு இருக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் ஆக்லாந்தில் உள்ள Pak'nSave சூப்பர் மார்க்கெட்டுக்கு என் தாயார் செல்லவிருந்தார்.
ஆனால் அவரை தனியாக அனுப்ப எனக்கு மனமில்லை, அதனால் நானும் உடன் சென்றேன். ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த போது பதட்டமாக இருந்தது, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து தாக்குதல் இனம், மதம் என எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என கூறியுள்ளார்.
அரசாங்க தரவுகளின்படி, நியூசிலாந்தில் 16,920 இலங்கையர்கள் குடியேறியுள்ளனர். இந்தக் குழுவில் 3500 க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo / Supplied