லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையரின் நீதிக்காக! புதிய புகைப்படத்தை வெளியிட்ட குடும்பத்தார்
லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் புதிய புகைப்படத்தை அவர் குடும்பத்தார் விசாரணைக்கு உதவும் நோக்கில் வெளியிட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Ranjith Kankanamalage (50) என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets கல்லறை பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர். Ranjith Kankanamalage கொலை சம்பவம் லண்டனில் உள்ள LGBT+ சமூகத்தினரிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.
(Image: Met Police)
இது தொடர்பாக நான்கு மாதங்களாக விசாரணைகள் நடந்து வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. இந்த கொலை தொடர்பில் 36 மற்றும் 41 வயதான இருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில் பொலிசார் மற்றும் அதிகாரிகள் விசாரணைக்கு உதவும் நோக்கில் Ranjithன் புதிய புகைப்படத்தை அவர் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர். BCU Commander மார்கஸ் பார்னெட் கூறுகையில், யாரோ ஒருவர் Ranjith மீது தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருப்புமுனையாக இருக்கக்கூடிய முக்கிய தகவல்கள் அவரிடம் இருக்கலாம். இந்த தகவலானது பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கலாம், அந்த சாட்சி முன் வந்து அதை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஏனெனில் இதன் மூலம் உயிரிழந்த Ranjith மற்றும் அவர் குடும்பத்தார், நண்பர்களுக்கு நீதி கிடைக்கும். நீங்கள் முன் வந்து தெரிந்ததை சொல்லுங்கள், தயவு செய்து பின் வாங்காதீர்கள். ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் பாலினத்தின் அடிப்படையில் நடந்த கொலையாக இதை கருதுகிறோம்.
இது ஏன் நடந்தது என்பது பற்றிய முழு விவரம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள் LGBT+ சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், வெறுப்பு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் தயவு செய்து முன் வந்து எங்களிடம் அது குறித்து கூறுங்கள், அது கூட எங்கள் விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே இவ்வழக்கில் துப்பு கொடுப்பவர்களுக்கு £20,000 வெகுமதி வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(Image: Metropolitan Police)