ஈரான் மீது ட்ரம்பின் கவனம்... உக்ரைன் தொடர்பில் ஸ்டார்மர் எடுத்த அதிரடி முடிவு
உக்ரைனுக்கான ஆதரவு குறித்து விவாதிப்பதற்காக, கெய்ர் ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இமானுவல் மேக்ரான் மற்றும் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
மூன்று நாடுகளும்
ஒரு வாரமாக அதிகரித்துள்ள கடும் நெருக்கடிகளுக்குப் பிறகு, ரஷ்யாவின் போர் குறித்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உக்ரேனியத் தலைவரின் கோரிக்கையை விளாடிமிர் புடின் நிராகரித்த நிலையில், அவர் பிரெஞ்சு ஜனாதிபதி மற்றும் ஜேர்மன் சேன்ஸலருடன் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் இந்த மூன்று நாடுகளும் மட்டுமே, உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவை இதுவரை அளித்து வருகிறது.
பிரான்சும் பிரித்தானியாவும் சமாதான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க உள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சனிக்கிழமையன்று குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான உக்ரேனிய ட்ரோன் தாக்குதல், ரஷ்யாவின் உட்பகுதிகளைத் தாக்கும் உக்ரைனின் வளர்ந்து வரும் திறனை மீண்டும் நிரூபித்துள்ளது.
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில், சனிக்கிழமை இரவு முழுவதும் விடியும் வரையில் ரஷ்யப் படைகள் ட்ரோன் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு மூன்று மாவட்டங்கள் மீது கிட்டத்தட்ட 30 முறை தாக்குதல் நடத்தியதில், ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூவர் காயமடைந்தனர்.
திருப்புமுனையாக
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் போர் குறித்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை புடின் வெள்ளிக்கிழமையன்று நிராகரித்தார்; அத்தகைய சந்திப்பில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தற்போது ஈரான் விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தி வரும் டொனால்ட் ட்ரம்ப், இருவரும் சந்திப்பார்கள் என்றால் அது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

புதன்கிழமையன்று, ஜெலன்ஸ்கியுடனான தொலைபேசி உரையாடலின்போது, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சை ஸ்டார்மர் கண்டித்தார். கடந்த மாதம், போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டபோது,
போலந்துடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு உறவில் ஏற்பட்டுள்ள தலைமுறை அளவிலான முன்னேற்றத்தை ஸ்டார்மர் பாராட்டினார்.
மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்வதை விடப் பெரிய சவால் நமது இரு நாடுகளுக்கும் வேறு எதுவும் இல்லை; உக்ரைனில் மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் நமது சொந்த நாடுகளிலும் இதன் தாக்கத்தை நாம் காண்கிறோம் என ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |