போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார்: பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் பதவியை பிடிப்பதற்காக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரே முயற்சித்துவருவது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், தனக்கு போட்டியாக களமிறங்கியுள்ளவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயார் என பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பதவியை பிடிப்பதற்காக...
பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துவரும் கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாக களமிறங்கியுள்ளவர்களில் ஒருவர், ஆன்டி பர்னாம்.
ஆன்டி, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார். ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல.

ஆகவே, அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடமுடியும்.
ஆகவே, மேக்கர்ஃபீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செய்துள்ளார்.
அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஆன்டி போட்டியிட உள்ளார். பிரச்சாரம் செய்யத் தயார் இந்நிலையில், தனக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று கூறியுள்ளார் பிரதமர் ஸ்டார்மர்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்வீர்களா என ஊடகவியலாளர்கள் பிரதமர் ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், ஆம், ஆன்டிக்கு ஆதரவாக மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று கூறியதுடன், லேபர் கட்சியில் தற்போது என்ன விவாதங்கள் நடந்துகொண்டிருந்தாலும், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் லேபர் கட்சி வெற்றி பெறுவது உண்மையாகவே முக்கியம் என்றும், அது லேபர் கட்சிக்கும் ரீஃபார்ம் கட்சிக்கும் இடையிலான நேரடி மோதல் என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, லேபர் கட்சியைச் சார்ந்த அனைவரும் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் லேபர் கட்சி வேட்பாளரான ஆன்டிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டார்மர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |