பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில், ஆளும் லேபர் கட்சி ஆயிரக்கணக்கான இருக்கைகளை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.
பதவி விலகமாட்டேன்...
ஆனால், ஸ்டார்மரோ பதவி விலகமாட்டேன் என அடம்பிடித்துவருகிறார்.

80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்திவருகிறார்கள்.
லேபர் கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சரான Miatta Fahnbulleh என்பவர் ஸ்டார்மருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ள நிலையில், மேலும் பலர் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

விடயம் என்னவென்றால், இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பதவி விலகுமாறு ஸ்டார்மரை யாரும் வலியுறுத்தியதாக தெரியவில்லை.
அத்துடன், கூட்டத்துக்குப் பிறகு கேபினட் அமைச்சர்கள் ஸ்டார்மருடன் இணைந்துகொண்ட நிலையில், வேலை மற்றும் ஓய்வூதியத் துறைச் செயலாளர் Pat McFadden, கூட்டத்தில் யாரும் ஸ்டார்மரை எதிர்க்கவில்லை என்றும், அரசாங்கம் தனது பணிகளைத் தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மரும், தான் தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாகவும், என்றாலும், தாங்கள் தொடர்ந்து நிர்வாகம் செய்யவேண்டும் என நாடு எதிர்பார்ப்பதாகவும், அதைத்தான் தானும் செய்வதாகவும், கேபினட்டும் கேபினட்டாக இணைந்து அதையே செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |