டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்யும் பிரித்தானிய பிரதமர்: புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளில் அடுத்த கட்டம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக, பிரித்தானியர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.
இன்னும் சில நாட்களில்...
இன்னும் சில நாட்களில் பிரித்தானியர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்த அறிவிப்பை ஸ்டார்மர் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
கூடுமானவரையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி வாக்கில், டிஜிட்டல் அடையாள அட்டை குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்மரைப் பொருத்தவரை, இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வர விரும்பும் புலம்பெயர்வோருக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றக்கூடும் என அவர் நம்புகிறார்.
குறிப்பாக, இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள், ஒருவருக்கு பிரித்தானியாவில் பணி செய்ய உரிமை உள்ளதா என்பதை சோதிக்கவும், வீடு வாடகைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்வதற்கான உரிமை உள்ளதா என்பதை சோதிக்கவும் பயன்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடயம் என்னவென்றால், பிரித்தானியர்கள் அனைவருமே டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பெற ஆர்வம் காட்டுவார்களா என்பதுதான்.
ஏனென்றால், சமீபத்திய ஆய்வு ஒன்றில், பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர், டிஜிட்டல் அடையாள அட்டை பெறுவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |