மெல்போர்னில் திருடப்பட்ட ஒரு கார்... மிகவும் எதிர்பாராத இடத்தில் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் சொகுசு கார்களைத் திருடி, அவற்றை துரிதமாகப் பணமாக்கிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் சோப்ரானோஸ் பாணியிலான குற்றச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மெல்போர்ன் புறநகர்
அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான கார்கள் திருடப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

இப்படியான வாகனங்கள் அனைத்தும் பொது பூங்காக்கள், தெருக்கள் மற்றும் தனியார் வணிகங்களிலிருந்து திருடப்பட்டு, பின்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு சட்டவிரோதமாக செயல்படும் பிரித்தெடுக்கும் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இப்படியான முகவரி இல்லாத, பெயரில்லாத பிரித்தெடுக்கும் கடைகள் மெல்போர்ன் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது. சர்வதேச மோசடியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் அப்படியே சொகுசு கார்களை சரக்குப் பெட்டகங்களில் ஏற்றி, விரைவாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
டொயோட்டா பிராடோ, லேண்ட்க்ரூஸர் மற்றும் ஹைலக்ஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள் உள்ளூரிலேயே பிரிக்கப்பட்டு, பாகங்களாக சரக்குப் எப்ட்டகங்களில் அனுப்பப்படுகின்றன. திருடப்படும் வாகனங்கள் பொதுவாக இரண்டாக வெட்டபப்ட்டு, அதன் முன் பகுதி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
6,600 வாகனங்கள்
திருடர்கள் முக்கியமாக டொயோட்டா வாகனங்களையே குறிவைக்கிறார்கள். திருடப்பட்ட கார் ஏற்றுமதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அரிதாகவே இடைமறிக்கப்படுகின்றன, அவர்கள் போதைப்பொருள், புகையிலை மற்றும் ஆயுதங்களுக்கான சரக்குகளைத் தேடுவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
விக்டோரியாவில் திருடப்பட்ட கார்களில் 20 சதவீதம் இதுவரை மீட்கப்பட்டதில்லை என்றே அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 2024/25ல் திருடப்பட்ட 33,018 வாகனங்களில் 6,600 வாகனங்கள் மீட்கப்படவில்லை.

அதிர்ச்சியூட்டும் திருப்பமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் விடுமுறைக்கு வந்திருந்த மெல்போர்ன் நபர் ஒருவர் துபாயில் சாலையில் தனது திருடப்பட்ட காரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த நபரின் கார் அவரது துபாய் பயணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்டது, அதை அவர் மறந்துவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவரது காருக்குப் புதிய உரிமையாளர் இருந்ததால், உள்ளூர் காவல்துறையினரை நாடி தமது வாகனத்தை மீட்க முடியாமல் போனது. உலகம் முழுவதிலுமிருந்து திருடப்பட்ட வாகனங்களுக்கான மையமாக துபாயை அதிகாரிகள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |