ட்ரம்பின் 15 சதவீத வரியால் நெருக்கடியில் பிரித்தானியா... ஒப்பந்தத்தைக் கைவிட இருக்கும் ஐரோப்பா
அமெரிக்காவின் உச்ச நீதுமன்ற தீர்ப்பை அடுத்து, ட்ரம்பின் 15 சதவீத வரியானது உலகளாவிய வர்த்தை ஒழுங்கை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மிக மோசமான பாதிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய பரஸ்பர வரிகளை ரத்து செய்யும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக அவர் அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத வரி விதித்தார்.

ட்ரம்பின் இந்த புதிய வரி விதிப்பில் இந்தியாவும் சீனாவும் நிம்மதியடைய, பிரித்தானியா கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 18 சதவீதம் வரியை எதிர்கொண்டு வந்த இந்தியாவுக்கு இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மீது 50 சதவீத வரி அமுலில் இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் அதை 25 சதவீதமாக ட்ரம்ப் குறைத்தார். தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை அடுத்து, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பிரிவு 122 இன் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வரியாக 15 சதவீதம் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியா இனி 15 சதவீதம் வரி செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது.
சீனா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத ஃபெண்டானில் வரிகளும் நீதிமன்றங்களால் நீக்கப்பட்டது. அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்த ஒருதலைப்பட்ச வரிகளை ரத்து செய்யுமாறு சீனா திங்களன்று அமெரிக்காவை வலியுறுத்தியது.
இதனிடையே, ட்ரம்பின் உலகளாவிய வரிகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, மிக மோசமான பாதிப்புக்குள்ளாகக்கூடும் என தெரிய வரும் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.

மற்ற பல நாடுகளை விட பிரித்தானியா 10 சதவீதம் என்ற குறைவான பரஸ்பர வரியால் பயனடைந்து வந்தது. ஆனால் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 15 சதவீதமாக வரிகளை உயர்த்துவதாக ட்ரம்ப் அறிவித்ததால், தற்போது பிரித்தானியாவும் அதிக வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஐரோப்பிய நாடாளுமன்றம்
இது அமெரிக்காவிற்கான பிரித்தானியாவின் ஏற்றுமதிக்கான செலவுகளை 3 பில்லியன் பவுண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் 40,000 பிரித்தானிய நிறுவனங்களைப் பாதிக்கலாம் என்றும் பிரித்தானிய வர்த்தக சபை கூறுகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த ஆண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

அத்துடன், , ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து அதன் வர்த்தகக் கொள்கை குறித்து முழு விவரங்களைப் பெறும் வரை, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒப்புதல் செயல்முறையை இடைநிறுத்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வர்த்தகத் தலைவர் முன்மொழிவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |