உடனே கைவிடுங்கள்... இஸ்ரேல் தொடர்பில் உலக நாடுகளை வலியுறுத்திய சவுதி பட்டத்து இளவரசர்
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை உடனே நிறுத்துமாறு உலக நாடுகளை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும்
தென்னாப்பிரிக்கா இணையமூடாக முன்னெடுக்கும் BRICS உச்சி மாநாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையிலேயே இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை கைவிட வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் சவுதி பட்டத்து இளவரசர் கோரிக்கை வைத்துள்ளார்.
@afp
மேலும், பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கு தீவிரமான மற்றும் விரிவான அமைதி செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோருவதாக பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி சவுதி அரேபியாவின் நிலை என்பது நிலையானது மற்றும் உறுதியானது எனவும், இரு நாடு தீர்வு தொடர்பான சர்வதேச முடிவுகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர பாலஸ்தீனத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது
காஸா பகுதியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றும், உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் இளவரசர் சல்மான வலியுறுத்தியுள்ளார்.
@reuters
காஸா பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதை சவுதி அரேபியா ஏற்கவில்லை என்றும் காஸா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் 7ம் திகதி முதல் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்ட வேண்டும் என்று சவுதி அரேபியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |