உடனடியாக உக்ரைன் மீதான போரை நிறுத்துங்கள்... ரஷ்ய நாடாளுமன்றத்தில் துணிச்சலாக குரல் கொடுத்தவர் இவர்தான்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயத்தில் ரஷ்ய நாட்டவர்கள் பலருக்கு ஒப்புதல் இல்லை என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியானவண்ணம் இருந்தன.
இந்நிலையில், முதல் முறையாக ரஷ்ய நாடாளுமன்றத்தில், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணிச்சலாக புடினுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அப்படி புடினை எதிர்த்தே துணிச்சலாக குரல் கொடுத்தவர், கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Leonid Vasyukevich (69) என்பவர்தான்.
உக்ரைனை ஊடுருவச் சென்று உயிரிழந்த ரஷ்யப் படைவீரர்களான இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அவர், அவர்களால் நம் நாட்டுக்கு நன்மை என்றாலும், நம் நாட்டு இளம்பிள்ளைகள் உயிரிழக்கிறார்கள், ஊனமுறுகிறார்கள் என்றார்.
இந்த சிறப்பு இராணுவ ஆபரேஷனை நம் நாடு நிறுத்தாவிட்டால், இன்னும் பலர் அநாதைகளாவார்கள் என்றார் அவர்.
புடின் இந்தப் போரைத் தொடருவாரானால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள், காயமடைவார்கள் என்று கூறிய Vasyukevich, ஆகவே, ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என கோருகிறோம் என்றார்.
Vasyukevich இப்படி துணிச்சலாக குரல் கொடுத்துவிட்டார். ஆனால், அதற்காக அவருக்கு என்ன நடக்கப்போகிறதோ என்று நினைத்தால் அச்சமாகத்தான் உள்ளது.
Vasyukevichவை பேச விடாமல் தடுக்க. தன்னாலான முயற்சிகளை நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த Alexander Rolik மேற்கொண்ட நிலையில், புடின் ஆதரவாளர்கள் Vasyukevichஐ துரோகி என விமர்சித்துள்ளார்கள்.
ரஷ்ய இராணுவத்தை அவமதித்ததற்காக அவர் சட்ட ரிதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.