மத்திய அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 2 உயிரிழப்பு! ஆயிரக்கணக்கானோரை பாதித்த மின்தடை
மத்திய அமெரிக்காவை சூறாவளி தாக்கியதில் 2 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூறாவளி தாக்கியதில் 2 பலி
அமெரிக்காவின் மத்திய ஓக்லஹோமா பகுதியை புதன்கிழமை சூறாவளி தாக்கியது, இந்த சூறாவளி ஷவ்னி மற்றும் கோலின் நகரங்கள் வழியாக பயணித்தது.
சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய வலுவான புயல் மத்திய அமெரிக்காவை தாக்கியதில் பல வீடுகள் அழிந்தன, மற்றும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் அவதிக்கு உள்ளானர்.
ஓக்லஹோமா நகருக்கு தெற்கே சுமார் 25 மைல் (41 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள மெக்லைன் கவுண்டியின் சிறிய நகரமான கோலில்(Cole) குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Intense large #tornado Cole, Oklahoma. Deployed subsonic sensor for infrasound. 4 homes damaged pic.twitter.com/bMwjuMVChM
— Reed Timmer, PhD (@ReedTimmerAccu) April 20, 2023
தேசிய வானிலை சேவை புதன்கிழமை மாலை ஓக்லஹோமா, கன்சாஸ் மற்றும் அயோவாவில் சூறாவளி மற்றும் கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கைகளை வெளியிடத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சூறாவளி குறித்து மெக்லைன் கவுண்டியின் துணை ஷெரிப் ஸ்காட் கிப்பன்ஸ் NBC யிடம் வழங்கிய தகவலில், ″நாம் பார்த்த சேதத்தின் அடிப்படையில் இன்னும் அதிகமாக உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் எதிர்பார்ப்பது நியாயமானது” என்று தெரிவித்தார்.
எச்சரிக்கை
இதற்கிடையில் தேசிய வானிலை சேவையின் புயல் முன்னறிவிப்பு மையம் வியாழன் இரவு டெக்சாஸில் இருந்து விஸ்கான்சின் வரை சூறாவளியை உருவாக்கும் வாய்ப்புள்ள அதிக புயல்கள் முன்னறிவித்துள்ளது.
புயல் வடக்கு நோக்கி ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரிக்கு நகரும் முன் கிழக்கு டெக்சாஸ் முழுவதும் சாத்தியமான சூறாவளிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
FIRST LIGHT:
— Jordan Hall (@JordanHallWX) April 20, 2023
Cole Oklahoma Damage from the strong #tornado that impacted yesterday afternoon. #okwx #wxtwitter @SevereStudios pic.twitter.com/Yzri7H6pgC