அமெரிக்காவை தாக்கிய வினோதமான இந்திய வகை கொரோனா வைரஸ்!
அமெரிக்காவில் முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்களால் பல உலக நாடுகளில் கொடுந்தொற்றின் இரண்டாவது மாற்றும் மூன்றாவது அலையின் பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்தன.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த மாதம் வினோதமாக இரட்டை பிறழ்வு கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
தற்போது இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தை சந்திப்பதற்கு இந்த 'double mutant' வைரஸும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு, சில ஆயிரங்களில் பதிவாகிவந்த தொற்று எண்ணிக்கை, தற்போது ஒரு நாளைக்கு 100,000 பாதிப்புகளை எட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் Northern California மாகாணத்தில், San Francisco Bay பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட 'double mutant' கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளதாக Stanford பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிக கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் இந்த புதிய வைரஸ் மேலும் தொற்றுக்களை அதிகரிக்கச் செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
