ஏற்கனவே பற்றியெரியும் பூமியில்... தீவிரமடையும் எல் நினோ தொடர்பில் எச்சரித்த ஐ.நா. தலைவர்
சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில், தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, ஏற்கனவே வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கும் பூமிக்கு மேலும் வலுசேர்ப்பதாக ஐ.நா. தலைவர் எச்சரித்துள்ளார்.
அதிகரிக்கக்கூடும்
மட்டுமின்றி, உலகை இதுவரை கண்டிராத ஒரு புதிய சூழலை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, எல் நினோ நம் வீட்டு வாசலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று நான் எச்சரித்திருந்தேன்.

தற்போது அது வீட்டிற்குள் வந்து, வெப்பத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று குட்டெரெஸ் உலக அமைப்பிடம் கூறினார். எல் நினோ வானிலை நிகழ்வானது, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து,
உலகளாவிய அளவில் காற்று, வளிமண்டல அழுத்தம் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்களைத் தூண்டி, ஒட்டுமொத்த உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் எல் நினோவின் தாக்கங்களை அதிகரிக்கக்கூடும்; ஏனெனில், வெப்பமடைந்த பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகியவை வெப்ப அலைகள் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்குத் தேவையான ஆற்றலையும் ஈரப்பதத்தையும் அதிகரிக்கின்றன.

வேறு சில ஆபத்துகளும்
இந்த நிலையில், சாதனை அளவிலான வெப்பம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் மிக மோசமான காட்டுத்தீ, கடும் வெப்பத்தால் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தது எனத் தீவிரமான சூழல் நிலவிய ஒரு கோடைக்காலத்தை நாம் ஏற்கனவே கடந்து வந்துள்ளோம் என்று குறிப்பிட்ட குட்டெரெஸ், ஆனால், சமீபத்திய அறிவியல் தரவுகளின்படி, இது வெறும் ஆரம்பக்கட்டம்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோவை உருவாக்கும் பசிபிக் கடற்பரப்பு, இவ்வளவு முன்கூட்டியே இவ்வளவு வெப்பமடைந்ததில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.

வெப்பம் சார்ந்த அபாயங்களைத் தாண்டி வேறு சில ஆபத்துகளும் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பருவமழை சராசரிக்கும் மிகக் குறைவாகவே பெய்து வருகிறது; அதேவேளையில், மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் முதல் தென் அமெரிக்கா, தெற்காசியா, தென்மேற்கு பசிபிக், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் வரை வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார்.
எல் நினோவின் தாக்கமும் மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றமும் ஒன்றிணையும் சூழலில், பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நாடுகளைக் குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |