மிக மோசமான பின்விளைவுகள் உறுதி... அமெரிக்காவின் திடீர் தாக்குதலை அடுத்து எச்சரிக்கை விடுத்த நாடு
சிரியா மற்றும் ஈராக்கில் இரவோடு இரவாக 85 இலக்குகளில் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு ஈராக் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறையாண்மையை மீறும் நடவடிக்கை
ஈராக் பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், அமெரிக்க தாக்குதலானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றார்.
@reuters
மட்டுமின்றி, அமெரிக்கத் தாக்குதல்கள் ஈராக்கின் இறையாண்மையை மீறும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஈராக் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜெனரல் யெஹியா ரசூல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள 85 இலக்குகள் மீது அமெரிக்கா இரவோடு இரவாக தாக்குதல்களை நடத்தியது.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்த நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு சிரியாவின் வெளிவிவகார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
@reuters
மேலும், அமெரிக்கா முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது, அதன் இராணுவப் படைகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டுகின்றன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா முன்னெடுத்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 16 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் ஈராக் தெரிவித்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |