வெளிநாட்டில் கோமா நிலையில் இந்திய மாணவி... அவசர விசா கோரும் குடும்பம்
அமெரிக்காவில் கோமா நிலையில் கிடக்கும் இந்திய மாணவியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு அவரின் குடும்பத்தினர் அவசரமாக விசா கோரி இந்திய அரசிடம் தீவிரமாக முறையிட்டு வருகின்றனர்.
ஆபத்தான நிலையில்
கலிபோர்னியாவில் பிப்ரவரி 14 அன்று மிக மோசமாக விபத்தில் சிக்கிய 35 வயதான நிலாம் ஷிண்டே ஆபத்தான நிலையில் உள்ளார். மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள அவரது தந்தை அன்றிலிருந்து விசா பெற முயற்சித்து வருகிறார்.
சாலை விபத்தில் சிக்கிய நிலாம் ஷிண்டேவுக்கு மார்பு மற்றும் தலையில் எலும்பு முறிவு மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் விபத்து குறித்து அறிந்துள்ளனர்.
குடும்பத்தாருக்கு தெரிய வந்த தகவலின் அடிப்படையில், அவரது மூளையை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 16ம் திகதி விபத்து நடந்ததை அறிந்த நாங்கள், அன்றிலிருந்து விசாவுக்காக முயற்சி செய்து வருகிறோம்.
விசா அனுமதி
ஆனால் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை தானாஜி ஷிண்டே கூறியுள்ளார். விபத்தை அடுத்து நிலாம் ஷிண்டேவின் கை, கால்கள் உடைந்துள்ளது.
பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது அறை தோழர்களே பிப்ரவரி 16 அன்று குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நிலாம் கோமா நிலையில் இருப்பதால், அவருடன் இருக்க, விசா அனுமதி வேண்டும் என கோரி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |