இந்திய வம்சாவளி இளம்பெண்ணை ஏதோ பூச்சி கடித்ததாக எண்ணிய தாய்: குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி
இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரின் தோளில் சிறிய வீக்கம் போன்ற ஒன்று காணப்பட்ட நிலையில், அதை ஏதோ பூச்சி கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என அவரது தாய் நினைத்துள்ளார்.
குடும்பத்தை நிலைகுலையவைத்த செய்தி
இங்கிலாந்திலுள்ள Bolton நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த ஜென்னா பட்டேல் (21), ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்றுகொண்டிருந்திருக்கிறார்.
ஒருநாள் தனது தோளில் ஏதோ வீக்கம் காணப்பட, அது ஏதோ பூச்சி கடித்ததால் ஏற்பட்ட வீக்கம் என நினைத்திருக்கிறார் அவர்.
சரி, இருந்தாலும் ஒரு மருத்துவரிடம் அதைக் காட்டிவிடலாம் என்று ஜென்னாவை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவரை பரிசோதித்த மருத்துவரும் அது ஒரு சாதாரண கட்டி என்றே கூறியிருக்கிறார்.
ஆனால், அந்தக் கட்டி பெரிதாகத் துவங்கவே, ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டிருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகளைக் கேட்ட ஜென்னாவின் குடும்பம் அதிர்ச்சியில் நிலகுலைந்துபோயிருக்கிறது.
ஆம், ஜென்னாவை Ewing’s sarcoma என்னும் அரியவகை எலும்புப் புற்றுநோய் தாக்கியுள்ளது தெரியவந்திருக்கிறது.
தாயின் சோகம்
மாதக்கணக்கில் கீமோதெரபி சிகிச்சையளித்தும் அந்த புற்றுநோய்க் கட்டி கரையாததால், அறுவை சிகிச்சை மூலம் அதை மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள்.
ஆனாலும், புற்றுநோய் ஜென்னாவின் நுரையீரல் வரை பரவிவிட்டிருக்கிறது.
image - mirror
கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஜென்னா இறந்துபோனார்!
என் மகளை ஏதோ பூச்சி கடித்ததாக நினைத்தோம். ஆனால், அவள் தனது 21ஆவது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பின் இறந்துபோனாள் என கண்ணீருடன் தெரிவிக்கிறார் ஜென்னாவின் தாய் பிரீத்தி (49).
ஜென்னாவின் நினைவாக, பிரித்தானியாவில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அவரது குடும்பம்.
image - mirror
image - mirror
image - mirror