ரஷ்யாவில் பயங்கரம்! பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதறவைக்கும் காட்சி
ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தற்போது 8 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது, மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 பேர் காயமடைந்திருக்கலாம் எனவும், காயத்தின் தனமை தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, குறித்த தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலில், தற்போது வளாகத்தில் இருக்கும் அனைவரையும் முடிந்தால் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்லது ஒரு அறைக்குள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், வளாகத்திற்குச் செல்லும் மக்களை உடனடியாகத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்கும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#BREAKING: Shooting reported at Russian university, harrowing footage shows students jumping out of windows to escape gunman
— RT (@RT_com) September 20, 2021
More: https://t.co/gV0sv3xUdE pic.twitter.com/bZYNG177yM
பல்கலைக்கழகத்தில் புகுந்து தாக்குதலை முன்னெடுத்தவர் 18 வயதான இளைஞர் எனவும், இதே பல்கலைக்கழகத்தின் மாணவர் எனவும், அவரது பெயர் Timur Bekmansurov எனவும் பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் முன்னரே தகவல் பதிவிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த இளைஞரை பொலிசார் சுட்டுக்கொன்றதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.