90 வினாடிகள் முன்னதாக முடிக்கப்பட்ட தேர்வு... தலா ரூ 49 லட்சம் இழப்பீடு கோரிய மாணவர்கள்
கல்லூரி சேர்க்கை தேர்வு திட்டமிட்டதை விட 90 வினாடிகள் முன்னதாக முடிந்ததாக குறிப்பிட்டு, தென் கொரிய மாணவர்கள் குழு ஒன்று அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கை மதிப்பில் ரூ 49 லட்சம்
அத்துடன் மீண்டும் தேர்வெழுத ஒரு வருட படிப்பு செலவுக்கான தொகையாக இலங்கை மதிப்பில் ரூ 49 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
@bbc
தென் கொரியாவில் Suneung எனப்படும் கல்லூரி செர்க்கை தேர்வானது பல்வேறு பாடங்களுடன் தொடர்ச்சியாக 8 மணி நேரம் முன்னெடுக்கப்படும். Suneung என்பது உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்று.
குறித்த தேர்வானது பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைகளை மட்டுமின்றி எதிர்கால உறவுகளையும் கூட தீர்மானிக்கிறது என்றே கூறப்படுகிறது. கடந்த 8ம் திகதி Suneung தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தலைநகர் சியோலில் தேர்வெழுதிய 39 மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். முதல் தேர்வில் 90 வினாடிகள் முன்னதாக மணி ஒலித்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
கவனம் செலுத்த முடியாமல் போனது
மட்டுமின்றி மாணவர்கள் சிலர் உடனையே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டாவது தேர்வின் போது தான் ஆசிரியர்கள் நடந்த தவறை உணர்ந்து மாணவர்களுக்கு கூடுதலாக 90 வினாடிகள் அளித்துள்ளனர்.
@getty
ஆனால் பதிவு செய்யப்பட்ட விடைகளை திருத்த வாய்ப்பளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த குழப்பத்தால், அடுத்த தேர்வுகளில் தங்களால் கவனம் செலுத்த முடியாமல் போனது என்றும் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்தே 39 மாணவர்களும் தென் கொரிய பண மதிப்பில் தலா 20 மில்லியன் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
2021ல் இது போன்ற ஒரு வழக்கில் மாணவர் ஒருவருக்கு 4,200 பவுண்டுகள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது 2 நிமிடங்கள் முன்னதாக மணி ஒலித்ததாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |