திருமண மண்டபத்தில் திடீரென பற்றிய தீ: 100 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்
வடக்கு ஈராக்க்கில் உள்ள திருமண மண்டபத்தில் திடீரென தீ பற்றியதால், 100 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண மண்டபத்தில் பற்றிய தீ
வடக்கு ஈராக் நகரமான அல்ஹம்தானியா மாவட்டத்தில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. அங்கு, திருமண நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.
அந்த சமயத்தில், மண்டபத்தில் திடீரென வேகமாக தீ பற்றியது. அப்போது, அங்கு ஒரு பகுதியில் பரவிய தீயானது வேகமாக அப்பகுதி முழுவதுமாக பரவியது.
இதனால், திருமணத்தை பார்க்க வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட அனைவரும் அலறியடித்து ஓடினர்.
ஆனால், மண்டபத்தில் பரவிய தீயால் அப்பகுதி முழுவதும் குறும்புகை சூழ்ந்ததால், அவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர்.
100 பேர் உயிரிழப்பு
இந்த திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |