மருமகன் ரிஷி சுனக்கிடம் கடைசியாக என்ன பேசினேன்? மாமியார் சுதா அளித்த சுவாரசிய பதிலின் வீடியோ
பிரித்தானியாவில் என்ன நடக்கிறது என அவர் பார்ப்பார், இந்தியாவில் நடக்கும் விடயங்கள் குறித்து நான் பார்ப்பேன் என ரிஷி சுனக் மாமியாரான சுதா மூர்த்தி கூறியுள்ளார்.
மருமகன் ரிஷி பற்றி பேசிய சுதா மூர்த்தி
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்று 2 மாதங்களை கடந்துவிட்டது. ரிஷி இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்தவர் ஆவார்.
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், மருமகன் ரிஷி குறித்து கேட்ட கேள்விகளுக்கு சுவாரசியமாக அவரின் மாமியாரான சுதா பதிலளித்தார். சுதா கூறுகையில், ரிஷி சுனக் பிரதமரானது மகிழ்ச்சி, அதற்கு மேல் எதுவும் இல்லை.
— Sudha_murthy (@sudhamurty) January 3, 2023
அரசியல் உரையாடலா?
பிரித்தானியாவில் என்ன நடக்கிறது என்பதை நான் பார்ப்பதில்லை, என் சொந்த நாட்டில் நடக்கும் விடயங்களை தான் பார்ப்பேன். அவர் நாட்டை அவர் பார்ப்பார் என்றார்.
அப்போது செய்தியாளர், கடைசியாக ரிஷியுடன் நீங்கள் நடத்திய உரையாடல் என்ன? அது அரசியல் உரையாடலா என கேட்டார்.
அதற்கு சுதா மூர்த்தி, இல்லவே இல்லை, அவர் எப்போதும் எங்கள் மருமகன், அவருக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.