சுந்தர் பிச்சையை அவமதித்த மாணவர்கள்? பேச்சை தொடங்கியதும் வெளியேறியதால் சலசலப்பு
கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை பேச தொடங்கிய உடனே அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர் பிச்சை பேச்சின் போது வெளியேறிய மாணவர்கள்
உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட்(Stanford) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுந்தர் பிச்சை சிறப்புரை வழங்க தொடங்கிய போது சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டமளிப்பு உடையுடன் அரங்கியில் இருந்து வெளியேறி சென்றனர்.

பின்னணி காரணம்
இந்நிலையில் மாணவர்கள் நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியேறிய போது Free Palestine என்று முழக்கமிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இஸ்ரேலுடன் 'ப்ராஜெக்ட் நிம்பஸ்' (Project Nimbus) என்ற 1.2 பில்லியன் மதிப்புள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இவை பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு உதவக்கூடும் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இந்த போரை வைத்து லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் மாணவர்கள் இந்த வெளிநடப்பு செயலை செய்ததாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி முடிவில், மாணவர்கள் வெளிநடப்பு குறித்து சுந்தர் பிச்சையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |