CSK vs KKR: ரசிகர்களை சர்ப்ரைஸ் பண்ண சுனில் நரேன்! என்ன செய்தார் தெரியுமா?
கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், சென்னை அணியின் ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை எடுத்தபோது அதிசயமாக தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மிகவும் கூலான மற்றும் அமைதியான பந்துவீச்சாளர் என்று அறியப்படுகிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் மைதானத்தில் அதிகமாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்.
ஆனால், இன்று அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை எடுக்கும்போது, அந்த கருத்தை மாற்றிவிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பவர்ப்ளேவில் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை பெற்றது. ருதுராஜும் டுப்ளெசிஸும் இணைந்து 8 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்களை சேர்த்தனர்.
கொல்கத்தா அணிக்கு இந்த நிலையில் கண்டிப்பாக ஒரு விக்கெட் தேவை என்று வேண்டிக்கொண்டு இருந்த நேரம் அது.
இந்த சூழலில் இரண்டரை நிமிட பிரேக் முடிந்து வந்ததும், முதல் ஓவரிலேயே ருதுராஜ் 32 ஓட்டங்களுக்கு சுனில் நரைனின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இது மிகப்பெரிய விக்கெட் என்று அவருக்கு மட்டுமல்ல அந்த அணிக்கே தெரியும்.
On normal days. On #IPLFinal #SunilNarine #KKR #KKRHaiTaiyaar #CSK #CSKvsKKR #Russell #KolkataKnightRiders #SRK pic.twitter.com/DQ8XQo3me8
— K U N A L (@Kunee_23s) October 15, 2021
அனால் இந்த விக்கெட்டுக்கு சுனில் நரைன் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமே.
அதனைத்தொடர்ந்து, சிஎஸ்கேவின் ஸ்கோரை அதிகரிக்க 15 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த ராபின் உத்தப்பாவையும் எல்பிடபிள்யூவை சிக்க வைத்து நரேன் மற்றொரு விக்கெட்டைப் பெற்றார்.
Going by accounts of Sunil Narine's celebration, he will next show some emotion at the fall of a wicket in the 2028 edition.#IPLfinals
— Gaurav Sethi (@BoredCricket) October 15, 2021
Sunil Narine Celebrated Gaikwad's Wicket .
— . (@anurag_17_) October 15, 2021
Miracle .