மூன்றாவது முறையாக விண்வெளிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியினரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மூன்றாவது முறையாக விண்வெளிக்குப் புறப்பட்டார்.
விண்ணில் ஏவப்பட்டது போயிங் ஸ்டார்லைனர்
நேற்று, அதாவது, புதன்கிழமை இரவு, 8.22 மணியளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
அந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகிய இருவரும் பயணிக்கிறார்கள். அந்த விண்கலம், இன்று, அதாவது, ஜூன் மாதம் 6ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலம் அவர்கள் இவரும் இந்த விண்கலனின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளிப்பயணத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், மனிதர்கள் விண்வெளிக்கும் பூமிக்கும் இடையில் பயணிப்பதை சாத்தியமாக்கும் ஒரு திட்டமாகும் இது.
பாராட்டுகள்
ஏற்கனவே, 2006 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இரண்டுமுறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அத்துடன், விண்வெளியில் நீண்ட நேரம் நடந்து சாதனையும் படைத்தார் அவர்.
Congratulations on a successful launch! https://t.co/DiwBo6LheW
— Elon Musk (@elonmusk) June 5, 2024
இந்நிலையில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதற்கு எலான் மஸ்க் முதலானோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள்.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதைக் காட்டும் புகைப்படங்கள் பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விண்கலம் ஏவப்பட்டதைக்காட்டும், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
A view of the Boeing NASA Starliner launch site from space.#Starliner #NASA #Boeing #BREAKING pic.twitter.com/OKA5OUMY0j
— Target Reporter (@Target_Reporter) June 5, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |