மொத்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு குழாய் மீது மர்ம தாக்குதல்: வெளிவரும் புதிய தகவல்
குழாய் வழியாக எரிவாயு அனுப்பப்படாததால், கசிவால் விநியோகம் பாதிக்கப்படாது
எரிவாயு வழங்கல் தடைப்பட்ட நிலையில், மொத்த ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு விலை உச்சம் தொட்டது.
ரஷ்யாவில் இருந்து மொத்த ஐரோப்பாவையும் இணைக்கும் எரிவாயு குழாயில் மர்மமான முறையில் தாக்குதல் முன்னெடுத்திருப்பதாக ஜேர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் குறித்த எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜேர்மன் பொருளாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவில் இருந்து மொத்த ஐரோப்பாவையும் Nord Stream 2 எரிவாயு குழாய் இணைக்கிறது.
@reuters
தற்போது அந்த குயாய் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கசிவு காரணமாக குழாயின் அழுத்தம் குறைந்தது, இருப்பினும் குழாய் வழியாக எரிவாயு அனுப்பப்படாததால், கசிவால் விநியோகம் பாதிக்கப்படாது என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவுக்கு எஞ்சிய ஐரோப்பிய நாடுகளுக்குமான எரிசக்தி விவகாரத்தில் இந்த Nord Stream 2 எரிவாயு குழாய் முக்கிய இடத்தில் உள்ளது. எரிவாயு வழங்கல் தடைப்பட்ட நிலையில், மொத்த ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு விலை உச்சம் தொட்டது.
@reuters
தங்கள் நாடு மீதான மேற்கத்திய நாடுகளின் தடையே இதற்கு காரணம் எனவும் ரஷ்யா கூறியது.
தற்போது Nord Stream 2 எரிவாயு குழாய் மீதான தாக்குதல் தொடர்பில் டென்மார்க் அதிகாரிகளுடன் விசாரணையில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் கூறியுள்ளது.