குழந்தை யாரிடம் வளரவேண்டும்? வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Supreme Court approves return of child to father in Canada after six years: குழந்தை யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கொன்றில், குழந்தையை கனடாவிலிருக்கும் தந்தையிடம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு இந்திய தம்பதியர் 2015ஆம் ஆண்டு திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்துவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

ஆனால், கனடா வந்ததிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக, 2019ஆம் ஆண்டு, கணவனிடம் சொல்லாமலே தன் 3 வயது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டார் அந்தப் பெண்.
2020ஆம் ஆண்டு, கனேடிய நீதிமன்றம் ஒன்றில் அந்தக் குழந்தையின் தந்தை வழக்குத் தொடர, குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும் என அந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அந்தக் குழந்தையின் தந்தை.
ஜூலை மாதம் 3ஆம் திகதி, குழந்தையின் தற்காலிகப் பாதுகாப்பை தந்தையிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் குழந்தையின் தாய்க்கு உத்தரவிட்டது.
ஏனெனில், வழக்காடுபவர்கள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் குழந்தை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை எதிர்த்துப் போராடுவதையும், பாதகமான தீர்ப்புக்குப் பிறகு மற்றொரு அதிகார வரம்பில் தஞ்சம் அடைவதையும் அனுமதிப்பது, பல்வேறு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நிறுவனங்களின் செயல்திறனையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தார்கள்.
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் குழந்தையின் தாய். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழந்தையை கனடாவில் இருக்கும் அதன் தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |