இறுதி மூச்சு வரை போராடினார்! தந்தையை இழந்து வாடும் ரெய்னாவின் உருக வைக்கும் வார்த்தைகள்
தன்னுடைய தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர், ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
ராணுவ தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் திரிலோக்சந்த், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தந்தையை இழந்து வாடும் சுரேஷ் ரெய்னா டுவிட்டரில், என் தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது,
நான் என்னுடைய வலிமையின் தூணை இழந்து விட்டேன், இறுதி மூச்சு வரை போராடிய போராளி அவர், உங்களது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
No words can describe the pain of loosing a father. Yesterday, on passing away of my father, I also lost my support system, my pillar of strength. He was a true fighter till his last breath. May you rest in peace Papa. You will forever be missed. pic.twitter.com/9XcrQZeh2r
— Suresh Raina?? (@ImRaina) February 7, 2022