10,374 வீடியோ: 450க்கும் மேற்பட்டவர்களை இரகசியமாக..910 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இளைஞர்
அவுஸ்திரேலியாவில் குளியலறைகளில் இரகசியமாக படம்பிடித்த மருத்துவர் 910 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
10,374 வீடியோ
மெல்போர்னின் வடகிழக்கில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனையின் ஊழியர் கழிப்பறையில் mesh bag-யில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 10ஆம் திகதி அன்று Ryan Yi Cho (28) என்ற இளநிலை அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டார். அவரது மின்னனு சாதனங்களை ஆய்வு செய்ததில் பல புதிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பின்னர் ஜூலை 25ஆம் திகதி அன்று, அவர் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தோன்றியபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் நபர்களின் 10,374 வீடியோ மற்றும் படக் கோப்புகளை பல சாதனங்களில் காவல்துறை அதிகாரிகள் கண்டெடுத்ததாகக் கூறப்படுகிறது என நீதிமன்றம் கேட்டறிந்தது.
மேலும், Cho-வின் கணினியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான கோப்புறைகளில் பெயரிடப்பட்டிருந்த, 460 வெவ்வேறு நபர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று விக்டோரியா காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இரகசியமாக படம்பிடித்ததாக
இந்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் Cho மீதான குற்றச்சாட்டுகளை ஒன்றிணைத்தால், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவர் மெல்போர்னில் உள்ள பல மருத்துவமனைகளில் உள்ள குளியலறைகள் மற்றும் ஷவர்களில் 450க்கும் மேற்பட்டவர்களை இரகசியமாக படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Cho வெள்ளிக்கிழமை அன்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் தோன்றினார். அங்கு அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் ( Cho) சில குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார்; ஆனால் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டார்.
அவர், 'தொடரவிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாங்கள் உடன்பாட்டில் உள்ளோம். அவற்றை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பது குறித்த விவாதம் மட்டுமே எஞ்சியுள்ளது' என்றார்.
அத்துடன் Cho-வின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் குறித்து விவாதிக்க, குற்றம்சாட்டப்பட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்புகொள்ளும் வரை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவொரு உடன்பாட்டிற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நீதிமன்றம் கேட்டறிந்தது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை Cho ஒப்புக்கொள்ளப்பட்டவுடன், இந்த வழக்கு விக்டோரியாவின் கவுண்டி நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு Cho கணிசமான சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். அவர் ஜூலை 9ஆம் திகதி அன்று மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றுவார் என்று தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |