5 ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்த பெண்: எக்ஸ்ரேயில் தெரிந்த அதிரவைத்த காட்சி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்ணொருவர் ஐந்து ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்த நிலையில், சமீபத்தில் அவரது மகன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது, எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வயிற்று வலியால் தவித்துவந்த பெண்
கேரளாவிலுள்ள Punnapra என்னுமிடத்தைச் சேர்ந்த உஷா ஜோசப், கடந்த ஐந்து ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்துவந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆலப்புழா மருத்துவக்கல்லூரியில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது.

ஆகவே, அவருக்கு வயிற்று வலி ஏற்படும்போதெல்லாம் அவரது மகனான ஷிபின் அவரை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர்களால் உஷாவுக்கு என்ன பிரச்சினை என கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஒருவேளை தன் தாய்க்கு சிறுநீரகக் கல் ஏதாவது இருக்குமோ என சந்தேகப்பட்ட ஷிபின் அவரை மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அந்த மருத்துவர் உஷாவுக்கு எக்ஸ்ரே ஒன்றை எடுத்துள்ளார்.
எக்ஸ்ரேயில் தெரிந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆம், உஷாவின் வயிற்றுக்குள், forceps என்னும், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிறிய இடுக்கி ஒன்று இருப்பது எக்ஸ்ரேயில் தெரியவந்துள்ளது.
தகவலறிந்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தாங்கள் அதை அகற்றுவதாகக் கூற, ஆளைவிடுங்கள், நாங்கள் வேறு மருத்துவர்களைப் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டார் ஷிபின்.
இதற்கிடையில், உஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் மருத்துவர், தான் அறுவை சிகிச்சை செய்யவில்லை என மறுக்க, செவிலியர்கள் மீது பழி போட முயற்சி மேற்கொள்ளப்பட்டுளது.
இந்நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்க, இந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |