பிரான்சில் 46 சதவிகித மக்கள் இனவெறுப்பை எதிர்கொள்கிறார்கள்: வியப்பூட்டும் ஆய்வு முடிவுகள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் புறநகர்ப்பகுதி ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட கருப்பினத்தவர் ஒருவர்
உடனடியாக, சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக இனவெறுப்புக் கருத்துக்கள் பரவத் துவங்கிவிட்டன!
இந்நிலையில், பிரான்சில் 46 சதவிகித மக்கள் இனவெறுப்பை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவித்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இனவெறுப்பை எதிர்கொள்ளும் பலதரப்பட்ட மக்கள்

பிரான்சில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 14,025 பேரிடம் இனவெறுப்பு தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், பிரான்சில் வாழும் மக்களில் 46 சதவிகிதம் பேர், தாங்கள் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
80 சதவிகித கருப்பினத்தவர்களும், 70 சதவிகித அரபு நாட்டவர்களும் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், வெள்ளையினத்தவர்கள் என கருதப்படுபவர்களிலும் 39 சதவிகிதம் பேர் இனவெறுப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதாவது, பிரான்சில் வெள்ளையர்களுக்கு எதிரான வெறுப்பும் நிலவுகிறது என்கிறார் ஆய்வை தலைமையேற்று நடத்தியவர்களில் ஒருவரான Francois Kraus என்பவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |