இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இணையும் இளம் வீரர்கள்! யார்..யார்? கசிந்த முக்கிய தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இரண்டு இளம் வீரர்கள் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் திகதி Nottingham மைதானத்தில் தொடங்குகிறது.
இதனிடையே, காயம் காரணமாக இந்திய வீரர்கள் சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், இளம் இந்திய வீரர்காள சூர்யகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன்.
சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சூரியகுமார் யாதவ், ஷா ஆகியோர் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.