வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்: தோல்வி குறித்து பேசிய அணித்தலைவர் சூர்யகுமார்
தவறான நேரங்களில் விக்கெட்டுகள் வீழ்ந்ததுதான் தோல்விக்கு காரணம் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
த்ரில் வெற்றி
ராய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கினை, பெங்களூரு அணி கடைசி பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது.
11 போட்டிகளில் 8வது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது.
சூர்யகுமார் யாதவ்
தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் 10 முதல் 15 ஓட்டங்கள் குறைவாகவே எடுத்திருந்தோம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கணிப்பு.
தவறான நேரங்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தது இதற்கு ஒரு காரணம். ஆனால், நமன் மற்றும் திலக் ஆகியோர் துடுப்பாடிய விதம் இந்த ஆடுகளத்தில் மிக அழகாக அமைந்திருந்தது; அது அவர்களின் சிறப்பான மன உறுதியை வெளிப்படுத்தியது" என்றார்.
மேலும், சக அணி வீரர் ராஜ் பாவா குறித்து அவர் கூறியபோது, "இந்த சீஸன் முழுவதும், ஏன் கடந்த ஆண்டும் கூட, ராஜ் பாவா இதற்காக (கடைசி ஓவரை வீசியவர்) மிக சிறப்பாக பயிற்சி செய்து வந்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். இந்த ஆண்டு நாங்கள் அவரைப் பார்த்தபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்தார்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |