இலங்கை தொடரில் கலக்கிய 2 இந்திய வீரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! கேட்டு வாங்கிய கோஹ்லி: அனுப்பி வைக்கும் பிசிசிஐ
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி வீரர்கள் சிலரை கோஹ்லி, இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டதால், அவர்களில் இரண்டு பேரை பிசிசிஐ அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே நடந்து முடிந்த மூன்ற போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான சீனியர் வீரர்களில் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோஹ்லி இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு பிசிசிஐயிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, ப்ர்த்விஷா, சூர்யகுமார் யாதவ், ஆகியோர் நிச்சயமாக இங்கிலாந்திற்கு இலங்கை தொடர் முடிந்தவுட அனுப்பி வைக்கப்படுவர் எனவும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.