ஆங் சாங் சூச்சி உடல்நிலை குறித்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர் தெரிவித்த முக்கிய தகவல்
மியான்மர் ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி உடல் நிலை குறித்து அந்நாட்டு இராணுவ ஆட்சிக்குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் முதன் முதலாக மியான்மர் ஆட்சிக்குழு தலைவர் ஜெனரல் Aung Hlaing ஹாங்காங்கின் பீனிக்ஸ் தொலைக்காட்சியுடனான நேர்காணலில் பங்கேற்று இரண்டு மணி நேரம் பேசியுள்ளார்.
இருப்பினும், முழு நேர்காணல் இன்னும் ஒளிபரப்பப்படவில்லை, ஆனால் மே 22 அன்று சமூக ஊடகங்களில் வெளியான நேர்காணலின் சில காட்சிகளில், ஆங் சாங் சூச்சி பற்றி மியான்மர் ஆட்சிக்குழுத் தலைவர் தகவல் அளித்தார்,.
ஆங் சாங் சூச்சி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார், அவர் வீட்டில் தங்கியிருக்கிறார், சில நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஜெனரல் Aung Hlaing கூறினார்.
பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர், ஆங் சாங் சூச்சி உட்பட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல தலைவர்களை மியான்மர் இராணுவம் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
அன்று முதல் இன்று வரை ஆங் சான் சூகி பொது வெளியில் தோன்றவில்லை. வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி மீது மோசடி உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
ஆங் சாங் சூச்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்று 2020 நவம்பர் தேர்தலின் போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது. உரிமம் பெறாத வாக்கி-டாக்கீஸ் வைத்திருந்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மியான்மரின் காலனித்துவ கால உத்தியோகபூர்வ ரகசியங்கள் சட்டத்தை அவர் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது, இது அவருக்கு எதிரான மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
ஆங் சாங் சூச்சி பிப்ரவரி 1ம் திகதி முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முதல் முறையாக மே 24 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.